புகைப்பிடிப்பது பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
இதனால் சில நாடுகளில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்படியான நிலையில் லண்டனில் புகைத்தலை முற்றாக இல்லாது ஒழிக்க அந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் லண்டன் புகைத்தலை முற்றாக இல்லாது ஒழித்த நாடாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு 2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.