உலகம் முழுக்க பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் அளவு வெறும் ஒரு தேக்கரண்டிக்கும் கொஞ்சம் அதிகம் மட்டுமே என நிபுணர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுக்க 54 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் இதுவரை 1,324,689 என பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உலகமெங்கும் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கையை ஒரு தேக்கரண்டியில் அள்ளலாம் என கணித மேதையான Matt Parker தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு தேக்கரண்டியில் 6 மில்லி லிற்றர் திராவகமே அள்ள முடியும், ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் அளவு சுமார் 8 மில்லி லிற்றராக இருக்கும் என அவர் கணித்துள்ளார்.

உலகமெங்கும் இத்தனை குழப்பம், நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, இறப்பு என நீளும் பட்டியலுக்கு மொத்த காரணம் அந்த ஒரு தேக்கரண்டி அளவு பெருந்தொற்றே என்றார் நிகழ்ச்சி ஒன்றில் Matt Parker.
உண்மையில், கொரோனா வைரஸ் மனித உயிரணுவை விட ஒரு மில்லியன் மடங்கு சிறியதாகும் என கூறியுள்ள அவர்,
மனித சமூகத்தில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை 3.3 மில்லியன் பில்லியன் என கணக்கிட்டுள்ளார்.