ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சி பூசல் காரணமாக மனமுடைந்து பூங்கோதை தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு சுயநினைவை இழந்த பூங்கோதை, உடல்நலக்குறைவால் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பூங்கோதையின் உடல்நிலை சீரராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.