திருமணத்திற்கு முன்பு காதலித்து இளைஞனுடன், பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கோயம்புத்தூரில் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. மகாலிங்கம் தன்னுடைய வேலை காரணமாக கோயம்புத்தூரிலேயே தங்கி இருந்துள்ளார். ரம்யாவும், குழந்தைகளும் திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சியிலிருந்த உறவினர்களிடம் இருந்து கோயமுத்தூரில் இருந்த மகாலிங்கத்திற்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
அதில், பேசிய உறவினர்கள், ரம்யா மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகாலிங்கம் உடனடியாக திருச்சிக்கு விரைந்து, மனைவி மற்றும் குழந்தைகளை தேடியுள்ளார்.
ஆனால், கிடைக்காத காரணத்தினால், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் மேற்கொண்டு முதற்கட்ட விசாரணையில், ரம்யா திருமணத்திற்கு முன்னர் வேறொரு இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இதனால் ரம்யா தற்போது தன் குழந்தைகளுடன் தன்னுடைய முன்னால் காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்தது. ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? எங்கு சென்றார்கள்? என்பது குறித்து எந்த வித தகவலும் தெரியாத்தால், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
8 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்னரும், திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு பெண் சென்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.