மதுரை மாவட்டத்தில் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மதுரை வாடிப்பட்டி தெத்தூர் பகுதி நாராயணபுரம் கிராமத்து மக்கள் ஆண் நாய் பெண் நாய்களை மணமக்களாக அலங்கரித்து தாலிகட்டி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த திருமணத்துக்கு பத்திரிகைகள் அடிக்கப்பட்டு உறவினர் மற்றும் பக்கத்து கிராமத்தினருக்கு கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்கள் மொய்ப்பணம் செலுத்திவிட்டு விருந்து சாப்பிட்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்து வருவதால் வேண்டுதல் நிறைவேறியதாக அப்பகுதிப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.