நிகழ்வுகள்
1201
லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.
1868
பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1877
செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1891
மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.
1917
கிறீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1924
பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
1928
சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
1938
நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.
1950
பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.
1958
விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
1971
வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.
1983
டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22 பேர் கொல்லப்பட்டனர்.