பொதுவாக உடற்பயிற்சியின்மையால் பல நோய்களை நம்மை ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்து வருகின்றது.
உடற்பயிற்சியும் யோகாசனமும் நம்மை நோயின்றி ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள உதவி புரிகின்றது.
தினமும் நடைபயிற்சியோ அல்லது வீட்டில் இருந்து செய்யக்கூடிய யோகாசனமாவது செய்வது அவசியமாகும்.
அந்தவகையில் தற்போது கழுத்து எலும்பு தேய்மானம், ஆஸ்துமாவை குணமாக்கும் ஒரு யோகாசனம் ஒன்றை பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.
- முதலில் தரையில் குப்புறபடுத்துக் கொண்டு மூச்சை நன்கு இழுத்து வெளி விட வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் பின் பக்கமாக கொண்டு சென்று வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு இரண்டு கால்களையும் மடக்கி குதிகால்களை தொடைகளுக்கு அருகே கொண்டு வரவும்.
- பின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்தின் மேற்புறத்திலும், இடது உள்ளங்கையை இடது பாதத்தின் மேற்புறத்திலும், வைக்க வேண்டும்.
- இந்த நிலையில் மூச்சை வெளிவிட்டபடி தலையையும், மார்பையும் மேல் நோக்கி உயர்த்தி குதிகால்களைத் தரையை நோக்கி நன்கு அழுத்தவும். முடிந்தால் குதிகால்களைத் தரையில் தொடும்படி செய்யவும்.
- இரண்டு முழங்கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி முடிந்த அளவுக்கு குறைக்கவும்.
- அடுத்து தலையை நன்றாக உயர்த்தி மேலே பார்க்கவும். இந்த நிலையில் சுமார் 20 விநாடிகளுக்கு சாதாரண சுவாசத்தில் இருந்துவிட்டு பிறகு கால்களை மெதுவாக விடுவிக்கவும்.
பயன்கள்
- மார்பு நன்கு விரிவடைவதால் நுரையீரலுக்கு அதிக மூச்சு காற்று கிடைக்க ஏதுவாகிறது. இதன் மூலம் ஆஸ்துமா குணமடைகிறது.
- கழுத்து எலும்பு தேய்வு குணமடைய உதவுகிறது.
- செரிமான மண்டலத்தை சீர் செய்வதால் உணவு எளிதில் சீரணமாகிறது.
- மலட்டுதன்மை குணமடையவும், சீறுநீரை வெளிப்படுத்தவும், கல்லடைப்பை குணப்படுத்தவும் உதவுகிறது.
- முதுகு எலும்பை உறுதியடையச் செய்கிறது. குதிகால்களை மிருதுவாக்கி காலில் ஏற்படும் வலியை போக்குகிறது.