தமிழர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் கொத்து ரொட்டி எப்பொழுதும் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படி ஒரு அபிமானத்துக்குரிய உணவில் ஒரு விழா என்றால் எப்படி இருக்கும்?
சவுத் மார்க்கம் பகுதியிலே இடம்பெற்ற விழாக்களில் மிகப் பெரிய விழாவாக "கொத்து பெஸ்ட்" இடம்பெற்றுள்ளது.
கொத்து ரொட்டி உணவை அனைவரும் சுவைக்கும் வகையிலும் கோடையை கொண்டாடும் வகையிலும் இந்த விழா நடைபெற்றது.
இதன் மூலம் சேகரித்த நிதி சிறுவர்களுக்கு உதவுவதற்காக இயங்கிக்கொண்டிருக்கும் YPAM எனும் அமைப்பிற்கு உதவ பயன் படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய நிகழ்வுகளுக்கும் ஊடக அனுசரணையை பெற்றுக்கொள்ள pr@lankasri.com எனும் இணையத்தள முகவரிக்கு எழுதவும்.