புதுச்சேரியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 16-ம் நாள் நினைவை நாளையொட்டி அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய திரையுலகின் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி. பாலசுப்ரமணியம் என்கிற எஸ்பிபி கடந்த மாதம் 25ஆம் திகதி காலமானார்.
அவரின் மறைவு உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் எஸ்.பி.பி.யின் 16-ம் நினைவை நாளையொட்டி புதுச்சேரியில் அரசு தரப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஜான்குமார் எம்.எல்.ஏ எஸ்பிபியின் பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்தார்.