பிரபல முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் 6 பந்துகளை 6 விதமாக வீசுவார் என்று கூறியுள்ளார்.
ஹைதரபாத்தில் பிறந்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) சத்யா, இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் தேடி போய் பார்ப்பார்.
இந்நிலையில் அவர் இது குறித்து கூறுகையில், இந்திய கிரிக்கெட் போட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ரோகித் சர்மா துடுப்பாட்டம் செய்யும் விதம் எனக்கு விவிஎஸ்.லட்சுமணை நினைவுபடுத்தும்.