டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவிலும் போராட்டம் வெடித்துள்ளது.
அங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர்.