கனடாவில் மூன்று பேரை கத்தியால் குத்திய வழக்கில் நபர் ஒருவரை பொலிசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
நாட்டின் டொரண்டோவில் உள்ள ஸ்க்கார்பரோவில் தான் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை நடந்துள்ளது.
மூன்று பேருக்கு கத்தி குத்து விழுந்த நிலையில் அவசர உதவி குழுவுக்கு இது குறித்து தகவல் தரப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த மூவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பிடித்துள்ள பொலிசார் அவரை காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்