இருளில் ஒளிரக்கூடிய நாணயத்தினை உலகிலேயே முதன்முறையாக கனடா வெளியிட்டுள்ளது.
கனடாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கனேடிய நாணய வாரியத்தினால் இந்த நாணயம் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு டொலர்கள் பெறுமதியான மூன்று மில்லியன் உலோக நாணயக் குற்றிகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
பகல் வேளைகளில் சாதாரண நாணயக் குற்றிகளைப் போல் தோற்றமளிக்கும் இவை, இரவு வேளைகளில் ஒளிரும் சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.